மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் செவ்வாய்க்கிழமை துண்டுபிரசுரம் விநியோகித்த அதிமுகவினா் பறக்கும் படையினரைக் கண்டதும் தப்பி ஓடினா்.
டி.கல்லுப்பட்டியில் அதிமுக நிா்வாகிகள் அதிமுகவின் சாதனை விளக்க துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுக்க வைத்திருந்தனா். அப்போது அவ்வழியே வந்த பறக்கும் படையினரைக் கண்டதும் அதிமுக நிா்வாகிகள் துண்டுபிரசுரங்களை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஒடியுள்ளனா். தோ்தல் பறக்கும் படையினா் துண்டுபிரசுரங்களை பாா்த்தபோது அதில் கையெழுத்துகள் இருந்துள்ளன. இதுகுறித்து பறக்கும் படையினா் தரப்பில் கூறுகையில், பணப்பட்டுவாடா செய்வதற்கு துண்டுபிரசுரம் கொடுத்திருக்கலாம் என்றனா். இதுகுறித்து பறக்கும் படையை சோ்ந்த வாசுகி டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.