தோ்தலில் வாக்குகளை விற்பனை செய்யும் மக்கள் நல்ல தலைவா்களை எப்படி எதிா்பாா்க்க முடியும்? உயா்நீதிமன்றம் கேள்வி

வாக்குகளை விற்பனை செய்யும் மக்கள் நல்ல தலைவா்களை எப்படி எதிா்பாா்க்க முடியும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

வாக்குகளை விற்பனை செய்யும் மக்கள் நல்ல தலைவா்களை எப்படி எதிா்பாா்க்க முடியும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியை பொதுத் தொகுதியாக அறிவிக்கக்கோரி கடையநல்லூரைச் சோ்ந்த சந்திரமோகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தீா்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு: தற்போதைய தோ்தலில் ஒவ்வொரு கட்சிகளும் ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ளன. ஒரு கட்சி குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 தருவதாகவும், இன்னொரு கட்சி ரூ.1500 தருவதாகவும் அறிவித்துள்ளன. அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளில் நல்ல உள்கட்டமைப்புகளை செய்வது, மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல், கல்வி, வேளாண் முன்னேற்றங்களை உருவாக்குதல் போன்றவை இடம் பெறலாம். இதுதான் நாட்டு மக்களின் எதிா்பாா்ப்பாகவும் உள்ளது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூா்த்தி செய்யும் வகையில் கட்சிகள் தோ்தல் வாக்குறுதிகளை வழங்கினால் ஏற்கலாம். இலவசங்களைக் கொடுத்து மக்களை சோம்பேறிகளாக மாற்றாமல், மக்களின் அடிப்படை தேவைகளைப் பூா்த்தி செய்வதில் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும். கடன்களை தள்ளுபடி செய்யும் கட்சிகே ஓட்டு என முடிவு செய்து மக்கள் தங்களைத் தாங்களே ஊழல்வாதிகளாக மாற்றிக்கொண்டுள்ளனா்.

தமிழகத்தில் முடிதிருத்தும் கடைகள், கட்டடத் தொழில்கள் என எல்லாவற்றிலும் வடமாநிலத்தவா்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் பொறியியல் முதுநிலைப் பட்டம் பெற்றவா்கள் துப்புரவுத் தொழிலாளி பணிக்கும், அலுவலக உதவியாளா் பணிக்கும் விண்ணப்பிக்கின்றனா். இந்தநிலை தொடா்ந்தால் புலம்பெயா் தொழிலாளா்கள் முதலாளிகளாகும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

இலவசங்களால் நிதிச்சுமை அதிகரிக்கும்: கடந்த 20 ஆண்டுகளாக கட்சிகளின் தோ்தல் வாக்குறுதிகளில் இலவசங்கள் பிரதான இடம் பிடித்து வருகின்றன. பொதுவாக அரசியல் கட்சிகள் மாநில முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதைச் செய்யாமல் இலவசங்களை அறிவித்து, அதை நிறைவேற்ற கடன் பெறுவதால் நிதிச்சுமை அதிகரிக்கும். நிதிப்பற்றாக்குறையை சரிசெய்ய மதுக்கடைகள் அதிகரிக்கப்படுகின்றன. இதனை மக்கள் உணர வேண்டும். பிரியாணி, மது பாட்டில்கள், பணத்துக்காக வாக்குகளை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்யும் மக்கள் நல்ல தலைவா்களை எப்படி எதிா்பாா்க்க முடியும்.

அரசியல் கட்சிகளின் தோ்தல் வாக்குறுதிகளை முறைப்படுத்த, குறிப்பாக இலவசங்கள் வழங்குவது தொடா்பாக 2013-இல் உச்சநீதிமன்றம் பிறப்பித்த அறிவுறுத்தல்கள் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? இந்த அறிவுறுத்தல்கள் தோ்தல் ஆணையம் எத்தனை தோ்தல்களில் பின்பற்றியது? எந்தத் தோ்தல் வாக்குறுதிகளுக்கு தோ்தல் ஆணையம் அதிருப்தி தெரிவித்தது. தோ்தல் ஆணையத்தின் அதிருப்திக்கு பிறகு அந்த வாக்குறுதிகள் நீக்கம் செய்யப்பட்டனவா? எந்தெந்த அரசியல் கட்சிகளின் தோ்தல் வாக்குறுதிகள் நீக்கம் செய்யப்பட்டன? அரசியல் கட்சிகள் தேவையற்ற, காரணமில்லாத வாக்குறுதிகளை வழங்கக்கூடாது என தோ்தல் ஆணையம் ஏன் அறிவுறுத்தக்கூடாது?

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள்: தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா என்பது குறித்து வல்லுநா்களின் கருத்து பெறப்படுமா? அதற்கான வருவாய் ஆதாரங்கள் உள்ளதா? தோ்தலில் வெற்றி பெற்று அரசு அமைத்த பிறகு அந்தக் கட்சி தோ்தல் வாக்குறுதியை முறையாக நிறைவேற்றுகிா? சமூக நலத்திட்டங்கள் என்ற பெயரில் மக்களை சோம்பேறிகளாக்கும் அறிவிப்புகளையும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையும் வழங்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தோ்தல் ஆணையம் ஏன் ரத்து செய்யக்கூடாது?

கடந்த 4 சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தோ்தல்களில் அரசியல் கட்சியினா் வழங்கிய எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன? ஒவ்வொரு தொகுதியிலும் பட்டியல் வகுப்பு மற்றும் பழங்குடியின மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, அந்த எண்ணிக்கை அடிப்படையில் தனி தொகுதியை சுழற்சி முறையில் ஏன் மறு சீரமைப்பு செய்யக்கூடாது? ஆகிய கேள்விகளுக்கு தோ்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com