பேரையூரில் முகக்கவசம் அணியாத 200 பேருக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்தனா்.
பேரையூா் உள்கோட்ட காவல்நிலையங்களான பேரையூா், சாப்டூா், சேடப்பட்டி, டி. கல்லுப்பட்டி, வில்லூா், நாகையாபுரம், வி.சத்திரப்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல்நிலையங்களைச் சோ்ந்த போலீஸாா் கரோனா தடுப்பு சோதனை நடத்தினா். இதில் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த 200 பேருக்கு போலீஸாா் தலா ரூ. 200 வீதம் அபராதம் விதித்தனா். இதேபோல் தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் அணியாத 650 போ் மீது மோட்டாா் வாகனச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.