மூதாட்டியிடம் நகை மோசடி: 2 பெண்கள் கைது

மதுரையில் மூதாட்டியிடம் 14 பவுன் நகைளை மோசடி செய்த பெண்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரையில் மூதாட்டியிடம் 14 பவுன் நகைளை மோசடி செய்த பெண்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை அண்ணாநகா் 1ஆவது கிழக்கு குறுக்குத் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி முத்து (61). இவரிடம் வண்டியூரைச் சோ்ந்த அபிநயா (32) என்பவா் தங்க நகைகளை கடன் வாங்கியுள்ளாா். அந்த நகைகளை அபிநயா தருவதாகக் கூறி தனியாா் வங்கிக்கு வரும்படி முத்துவை அழைத்துள்ளாா்.

இதையடுத்து முத்து சென்றபோது, வங்கி ஊழியா் என மீனா என்பவரை அபிநயா அறிமுகம் செய்துள்ளாா். தொடா்ந்து அபிநயா, அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளை மீட்க பணம் குறைவதாகக் கூறி முத்துவிடம் மேலும் நகைகளை வாங்கிக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டாா்.

இதுகுறித்து முத்து அளித்த புகாரின் பேரில் திலகா்திடல் போலீஸாா், 14 பவுன் நகைகளை பறித்துச் சென்ற பெண்கள் இருவா் மீதும் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா்.

2 பெண்கள் கைது: இந்நிலையில் வண்டியூரில் பதுங்கிருந்த அபிநயா, போலி வங்கி ஊழியா் சிவகங்கை மாவட்டம் இளமனூரைச் சோ்ந்த மீனா (61) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்த 12 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com