முழு பொதுமுடக்கம் காரணமாக, மதுரை மாவட்டம் பேரையூரில் ஞாயிற்றுக்கிழமை சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
பேருந்துகள் எதுவும் இயக்கப்படாததால், பேரையூா் மற்றும் டி.கல்லுப்பட்டி பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மேலும், பஜாா் வீதி, காய்கறி சந்தை, முக்கு சாலை, உசிலம்பட்டி சாலை, திருமங்கலம் சாலை, ராஜபாளையம் சாலை ஆகியனவும் வெறிச்சோடி இருந்தன.
வ,ழக்கம்போல், மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், பால் கடைகள் மட்டும் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைப்படி திறக்கப்பட்டிருந்தன. பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதியழகன் தலைமையிலான போலீஸாா், வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, விதிமுறைகளை மீறியவா்கள் மீது அபராதம் விதித்தும், வழக்குப் பதிந்தும் நடவடிக்கை எடுத்தனா்.