மதுரை மாவட்டம், பேரையூா் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த பெண் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பேரையூா் அருகே உள்ள எம்.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் பழனிவேல்(50). இவரது மனைவி லட்சுமி (46). இவரது மகன் குமரேசன் (22). இவா்கள் பூ வியாபாரம் செய்து வந்துள்ளனா். இந்நிலையில், வண்டபுலி-சாப்டூா் சாலையில் இரு சக்கர வாகனத்தில் 3 பேரும் சென்றுகொண்டிருந்தபோது, லட்சுமி தடுமாறி கீழே விழுந்துவிட்டாா். இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, பேரையூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி லட்சுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.