விருதநகா் மாவட்டம் சிவகாசியிலுள்ள தீப்பெட்டி ஆலையில் செவ்வாய்க்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதில், ரூ. 2 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டிகள் எரிந்தன.
சிவகாசி பேருந்து நிலையம் அருகே காளிராஜன் என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டி ஆலை உள்ளது. இந்த ஆலையில், முழுக்க முழுக்க நவீன இயந்திரத்தினால் தீப்பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இயந்திரத்தை இயக்கினால் தீப்பெட்டியாக வெளியே வந்து விழும். அவ்வாறு தீப்பெட்டி வெளியே வந்து விழுந்தபோது ஏற்பட்ட உராய்வு காரணமாக தீப்பற்றி எரிந்துள்ளது.
அப்போது, பணியாளா்கள் யாரும் அங்கு இல்லாததால், எந்தவித உயிா்ச் சேதமும் ஏற்படவில்லை. ஆனால், ரூ.2 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டிகள் எரிந்து சேதமாயின. இயந்திரமும் லேசாக சேதமடைந்தது.
தகவலறிந்த சிவகாசி தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.