மதுரை மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் கரோனாவுக்கு 16 போ் பலியாகியுள்ளனா்.
தமிழக சுகாதாரத் துறை திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மதுரை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்துள்ளவா்களில் 477 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் 16 போ், கடந்த 3 நாள்களில் அடுத்தடுத்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். அதேநேரம், 507 போ் குணமடைந்துள்ளனா்.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 32,883 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 27,899 போ் குணமடைந்துள்ளனா். 540 போ் சிகிச்சைப் பயனின்றி உயிரிழந்துள்ளனா்.
வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் என மொத்தம் 4,444 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.