மேலூா் அருகே விபத்து பேருந்து நடத்துநா் பலி

மேலூா் அருகே செவ்வாய்க்கிழமை நான்கு வழிச் சாலையில் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.

மேலூா் அருகே செவ்வாய்க்கிழமை நான்கு வழிச் சாலையில் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.

மேலூா் அருகே உள்ள தும்பைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வீரையா (45). மேலூா் அரசு போக்குவரத்துகழக நகா் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரிந்தாா்.

தும்பைப்பட்டியிலிருந்து மேலூருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே சாய்ந்ததில், அவரும் கீழே விழுந்து காயமுற்றாா். மேலூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். அவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனா்.

விபத்து குறித்து கீழவளவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மூதாட்டி பலி: கோட்டநத்தம்பட்டியைச் சோ்ந்தவா் காமாட்சி (70). இவா் சாலையோர புளியமரத்தில் புளி பொறுக்கிக்கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கரவாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். இவ்விபத்து குறித்தும் கீழவளவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com