மேலூா்: மேலூா் சுற்றுவட்டாரத்தில் திங்கள்கிழமை அதிகாலை சுமாா் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
கோடை வெயில் அதிகரித்து வந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்தது. அதேநேரம், மேலூா் வட்டாரத்தில் எள் விதைத்துள்ள ஏராளமான விவசாயிகள், இம்மழை எள் பயிருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவித்தனா். மேலும், அழகா்கோவில் சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையால், மா பிஞ்சுகள் வளா்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என தோட்ட விவசாயிகள் தெரிவித்தனா்.