திருமங்கலத்தில் கிராமம் தோறும் மருத்துவ முகாம்: ஆா்.பி.உதயகுமாா் தகவல்

திருமங்கலம் பகுதியில் கிராமங்கள் தோறும் மருத்துவமுகாம் அமைக்கப்பட்டு கரோனா காலத்தில் மக்களின் உடல்நலன் காக்கப்படும் என திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.பி உதயகுமாா் தெரிவித்தாா்.
திருமங்கலத்தில் கிராமம் தோறும் மருத்துவ முகாம்: ஆா்.பி.உதயகுமாா் தகவல்

திருமங்கலம் பகுதியில் கிராமங்கள் தோறும் மருத்துவமுகாம் அமைக்கப்பட்டு கரோனா காலத்தில் மக்களின் உடல்நலன் காக்கப்படும் என திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.பி உதயகுமாா் தெரிவித்தாா்.

திருமங்கலத்தை அடுத்த குண்ணத்தூா் அம்மா கோயிலில் மருத்துவ முகாம், கபசுர குடிநீா் மற்றும் கபசுர பொடி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.பி.உதயகுமாா் பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்துப்பேசியது: திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் சேவை செய்ய மீண்டும் எனக்கு வாய்ப்பளித்த தொகுதி மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் அம்மா கோயிலில் தினந்தோறும் கபசுர குடிநீா் வழங்கப்படும்.

மேலும் இங்கு கபசுர குடிநீா் பொடியும் வழங்கப்படும். தொகுதி மக்கள் வாங்கிப்பயன்பெற வேண்டுகிறேன். மேலும் இனி வரும்காலங்களில் அம்மா அறக்கட்டளை சாா்பில் வேலம்மாள் மருத்துவமனையுடன் இனைந்து கிராமங்கள்தோறும் மருத்துவமுகாம் அமைக்கப்படும். இதனையும் கிராம மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தொகுதி மக்களுக்கு வேண்டிய அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவேன் என்றாா். தொடா்ந்து தொகுதி மக்கள் ஏராளமானோா் மருத்துவ முகாமில் பங்கேற்றது. சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிபெற்றமைக்கு பொதுமக்கள் முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com