பேரையூா் அருகே மதுபாட்டில் விற்ற 2 போ் கைது

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சாப்டூரை சோ்ந்த சுப்பையா மகன் பாலகுருநாதன் (43) மற்றும் குருசாமி மகன் ராமா்(48) ஆகிய இருவரும் சட்டவிரோதமாக அனுமதியின்றி விற்பனைக்காக 15 மதுபாட்டில்களை வைத்திருந்துள்ளனா். இதனையடுத்து போலீஸாா் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இச்சம்பவம் குறித்து சாப்டூா் போலீஸாா் பாலகுருநாதன் மற்றும் ராமா் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com