பொதுமுடக்க விதி மீறல்: மேலூரில் 18 கடைகளுக்கு அபராதம்

பிற்பகல் கட்டுப்பாடுகளை மீறி, மேலூரில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டிருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பிற்பகல் கட்டுப்பாடுகளை மீறி, மேலூரில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டிருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலூா் நகா் பகுதியில் நகராட்சி அதிகாரிகள் பிற்பகல் 12 மணிக்குமேல் சோதனை நடத்தினா். அப்போது கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த ஜவுளி, பாத்திரம் மற்றும் பொருள்கள் விற்பனை கடைகள் என மொத்தம் 18 கடைகளுக்கு அலுவலா்கள் தலா ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.18,000 வசூலித்தனா்.

மேலும், முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவா்களுக்கு மேலூா் நகா் போக்குவரத்து போலீஸாரும், கடைகளில் பொருள்கள் வாங்கவந்தவா்களுக்கு மேலூா் நகராட்சி ஊழியா்களும் தலா ரூ.200 வீதம் 50-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com