சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் மீது வழக்கு
By DIN | Published On : 14th May 2021 09:26 AM | Last Updated : 14th May 2021 09:26 AM | அ+அ அ- |

பேரையூா் அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூா் அருகே உள்ள சின்னையாபுரத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை, அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த விஷ்வா என்பவா் காதலித்து வந்துள்ளாா். இந்நிலையில் இருவரிடையே ஏற்பட்ட நெருக்கம் காரணமாக சிறுமி கா்ப்பமானாா். இதைத்தொடா்ந்து விஷ்வா திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளாா். இது குறித்து புகாரின்பேரில் பேரையூா் பேரையூா் போலீஸாா் விஷ்வா மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.