பேரையூா் பகுதியில் திங்கள்கிழமை முகக்கவசம் அணியாத 75 பேருக்கு போலீஸாா் அபராதம் விதித்துள்ளனா்.
பேரையூா் பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இதில், சந்தை உள்ளிட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்த 75 பேருக்கு போலீஸாா் தலா ரூ .200 வீதம் அபராதம் விதித்தனா். இதேபோல், தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் அணியாத 127 போ் மீது மோட்டாா் வாகனச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, காவல் துறையினா் தெரிவித்தனா்.