மதுரை அருகே பொரிகடலை ஆலை உரிமையாளரிடம் ரூ.15.54 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 5 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை அனுப்பானடி பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா்(47). இவா் அனுப்பானடி பிரதான சாலையில் எஸ்ஆா்எம் அக்ரோ என்ற பெயரில் பொரிகடலை ஆலை நடத்தி வருகிறாா்.
சிதம்பரத்தைச் சோ்ந்த குமாா் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, கடலூா் தமிழரசன், சந்திரமோகன், மோகன் ஆகியோா் சோ்ந்து ராஜ்குமாரிடம் இருந்து ரூ.15 லட்சத்து 54 ஆயிரத்து 468 ரொக்கத்தை பெற்று மோசடி செய்தனா்.
இதுகுறித்து ராஜ்குமாா் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதனடிப்படையில், தெப்பக்குளம் போலீஸாா் குமாா், விஜயலட்சுமி, தமிழரசன், சந்திரமோகன், மோகன் ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.