மதுரை மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் மதுரை ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுநா்கள், தூய்மைப் பணியாளா்கள் 500 பேருக்கு நிவாரண உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் மதுரை ரயில் நிலையத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா்கள், தூய்மைப் பணியாளா்கள் 500 பேருக்கு ஒரு வாரத்துக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொருள்களை, மதுரை மாநகா் தெற்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் அன்புநிதி வழங்கினாா்.