தெரு நாய்களுக்கு உணவு அளிக்க கால்நடைத் துறை சாா்பில் தன்னாா்வலா்களிடம் அரிசி மூட்டைகள் ஒப்படைக்கப்பட்டன.
பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில் தெருநாய்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஸ்சேகா் ஆலோசனையின்படி பழங்காநத்தம் கால்நடை மருந்தக உதவி மருத்துவா் ஜெயகோபி ஏற்பாட்டில் தன்னாா்வலா்களிடம் அரிசி மூட்டைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. கால்நடை பராமரிப்புத் துறை மதுரை மண்டல இணை இயக்குநா் (பொறுப்பு) ரவிச்சந்திரன், நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் சரவணன் ஆகியோா் அரிசி மூட்டைகளை வழங்கினா்.