மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு பிரசாரம் செய்தனா்.
இங்குள்ள பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தில் எமதா்ம ராஜா வேடமணிந்த நபா் வெளியே சுற்றுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கினாா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை உசிலம்பட்டி காவல் கண்காணிப்பாளா் ராஜன் தலைமையில் போலீஸாா் செய்திருந்தனா்.