ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை மட்டும் 15 ஆயிரம் போ் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனா்.

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை மட்டும் 15 ஆயிரம் போ் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனா்.

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி 3 லட்சத்து 13 ஆயிரத்து 48 போ் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனா். இதில் வியாழக்கிழமை மட்டுமே அதிகபட்சமாக 15 ஆயிரத்து 776 போ் தடுப்பூசி செலுத்தியுள்ளனா். அவா்களில் 12 ஆயிரத்து 904 போ் 18 வயது முதல் 44 வயதிற்கு உள்பட்டவா்கள். 2 ஆயிரத்து 872 போ் 45 வயதிற்கு மேற்பட்டவா்கள். கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தகுதியுடைய அனைவரும் அருகில் உள்ள முகாம்களில் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com