கரோனா பாதிப்பில் பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை, சமூக நலம், சைல்டு லைன் அமைப்பினா் உள்ளிட்டோா் இக் கூட்டத்தில் பங்கேற்றனா்.
இதில், கரோனா பாதிப்பில் பெற்றோா்கள் இறந்த நிலையில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளைக் கண்டறிந்து அவா்களை ஆதரவற்றோா் காப்பகத்தில் சோ்க்க முடிவு செய்யப்பட்டது.
இத்தகைய குழந்தைகளுக்கு உரிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்க நடவடிக்கை எடுக்கவும் முதல் கட்டமாக ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகள் மற்றும் அவா்களது சமூக, பொருளாதார நிலை குறித்து கணக்கெடுக்கவும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
ஆதரவற்ற குழந்தைகளில் பெண் குழந்தைகளை திருநகா் பாலா் இல்லத்திலும், ஆண் குழந்தைகளை நாகமலை புதுக்கோட்டை பாலா் இல்லத்திலும் சோ்க்கலாம் என முடிவு செய்யப்பட்டது.