பேரையூா் பகுதியில் முகக் கவசம் அணியாத 23 பேருக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்தனா்.
பேரையூா் பகுதியில் காவல்துணைக் கண்காணிப்பாளா் மதியழகன் தலைமையிலான போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். இதில் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த 23 பேருக்கு போலீஸாா் தலா ரூ. 200 வீதம் அபராதம் விதித்தனா். மேலும் காரணமின்றி வெளியே சுற்றிய 5 பேரின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.