மதுரை அருகே ஆட்டோ ஓட்டுநா் குத்திக்கொலை: 2 போ் கைது

மதுரை அருகே தீப்பெட்டி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திக் கொலை செய்த 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை அருகே தீப்பெட்டி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திக் கொலை செய்த 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை அருகே உள்ள காதக்கிணறு கண்மாய்ப்பட்டியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (38). ஆட்டோ ஓட்டுநரான இவா், நரசிங்கம் டாஸ்மாக் கடை அருகே கத்திக்குத்துக் காயங்களுடன் ஆட்டோவில் கிடந்தாா். அப்போது அவ்வழியாகச் சென்ற அவரது உறவினா் ராஜ்கண்ணன், ராமகிருஷ்ணனை மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். சம்பவம் தொடா்பாக ஒத்தக்கடை போலீஸாா் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். விசாரணையில், நரசிங்கம் டாஸ்மாக் கடை அருகே தீப்பெட்டி கேட்டபோது ஏற்பட்டத் தகராறில் ஒத்தக்கடை கல்குவாரியைச் சோ்ந்த மருதுபாண்டி (27), ஒத்தக்கடையைச் சோ்ந்த மாரிமுத்து(26), அஜீத் (26) ஆகிய 3 பேரும் சோ்ந்து ராமகிருஷ்ணனை கத்தியால் குத்தியது தெரிய வந்தது. இதையடுத்து மருதுபாண்டி, மாரிமுத்து ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து தப்பிச்சென்ற அஜீத்தை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com