நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த நாடோடி இன மக்கள்

ஜெய்பீம் திரைப்படத்தில் பழங்குடியின மக்கள் பிரச்னைகளை காட்சிப்படுத்திய நடிகர் சூர்யாவுக்கு நாடோடியின மக்கள் நன்றி தெரிவித்தனர்.
நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த நாடோடி இன மக்கள்.
நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த நாடோடி இன மக்கள்.

ஜெய்பீம் திரைப்படத்தில் பழங்குடியின மக்கள் பிரச்னைகளை காட்சிப்படுத்திய நடிகர் சூர்யாவுக்கு நாடோடியின மக்கள் நன்றி தெரிவித்தனர்.

நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் வெளியாகியுள்ளது. பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்வியல் குறித்து இந்தப் படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஜெய்பீம் திரைப்படுத்தில் பழங்குடியின மக்கள் பிரச்னைகளை காட்சிப்படுத்திய நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து நாடோடியின மக்கள் பாம்பு, எலிகளுடன் வந்து நன்றி தெரிவித்தனர்.

மேலும், பழங்குடி மக்களுக்கு சாதிச்சான்று, நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்குவதற்கு உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த அவர்கள், இந்த உத்தரவைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com