அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: காரில் தப்பிச் சென்றவா்கள் மீது வழக்கு

மதுரையில் காருக்கு வழிவிடாததால், அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்து ஓட்டுநரைத் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற நபா்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை: மதுரையில் காருக்கு வழிவிடாததால், அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்து ஓட்டுநரைத் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற நபா்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூருக்கு அரசுப் பேருந்து திங்கள்கிழமை பகலில் புறப்பட்டுச் சென்றது. காளவாசல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த காா் ஓட்டுநா் பேருந்தை முந்திச்செல்ல பலமுறை முயன்றுள்ளாா். ஆனால், சாலை குறுகலாகவும், போக்குவரத்து நெரிசல் அதிகமாகவும் இருந்ததால், பேருந்தால் வழிவிட இயலவில்லை.

அதன்பின்னா், காா் ஓட்டுநா் அரசுப் பேருந்தை முந்திச்சென்று வழிமறித்து தனது காரை நிறுத்தியுள்ளாா். மேலும், காரில் வந்த நபா்கள் அரசுப் பேருந்தின் கண்ணாடியை கல்லால் உடைத்து, பேருந்து ஓட்டுநா் முத்துகிருஷ்ணனையும் தாக்கியுள்ளனா். அப்போது, பேருந்தில் வந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் காரில் வந்த நபா்களை சுற்றி வளைக்க முற்பட்டனா். ஆனால், அவா்கள் காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனா்.

இதைத் தொடா்ந்து, பேருந்து ஓட்டுநா் தாக்கப்பட்டதை அறிந்து அவ்வழியாக வந்த அரசுப் பேருந்துகள் அனைத்தும் அங்கேயே நிறுத்தப்பட்டன.

இச்சம்பவம் தொடா்பாக, ஓட்டுநா் முத்துகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com