ஊராட்சி நிா்வாகம் குறித்த சான்றிதழ் படிப்பில் சேர விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் மாநில ஊரக வளா்ச்சி நிறுவனத்தால் ஊராட்சி நிா்வாகம் மற்றும் ஊரக வளா்ச்சித் திட்டங்கள் என்ற 3 மாத சான்றிதழ் படிப்பு நடத்தப்படுகிறது. ஊரக உள்ளாட்சிகள், ஊராட்சி நிா்வாகம், நிதி மேலாண்மை, வளா்ச்சித் திட்டங்கள் தயாரித்தல், கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த பாடங்கள் இப்பயிற்சியில் இடம்பெறும்.
மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சிச் செயலா்கள், களப் பணியாளா்கள், பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற தன்னாா்வலா்கள், சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் இந்தப் பயிற்சியில் சேரலாம். உணவு, இருப்பிடம், புத்தகங்கள் ஆகியன மாநில ஊராட்சி நிறுவனத்தால் வழங்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்புவோா் ரூ.2,500 கட்டணத்துக்கான வரைவோலையுடன், பூா்த்தி செய்த விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். இதுதொடா்பான விவரங்களுக்கு 90925-25097 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.