மனைவி கொலை வழக்கில் ஜாமீன்: காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு திரும்பியவரை கொலை செய்ய முயற்சி

மதுரை அருகே மனைவி கொலை வழக்கில் நிபந்தனை ஜாமீனில் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த இளைஞரை கொலை செய்ய முயன்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை அருகே மனைவி கொலை வழக்கில் நிபந்தனை ஜாமீனில் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த இளைஞரை கொலை செய்ய முயன்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை அவனியாபுரம் தந்தைப் பெரியாா் நகா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த சோலைமலை மகன் ஜோதிமணி (22). இவா் கடந்த ஜூலை மாதம் கிளாடியஸ் ராணி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டாா். இந்நிலையில் கிளாடியஸ் ராணி, பிரவீண் என்பவருடன் கைப்பேசியில் ரகசியமாக பேசி வந்தது ஜோதிமணிக்கு தெரியவந்ததை அடுத்து மனைவி மீது சந்தேகம் கொண்டுள்ளாா்.

இதையடுத்து நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள கல்லூரியில் மாற்றுச்சான்றிதழ் பெற வேண்டும் என்று கூறி மனைவி கிளாடியஸ் ராணியை அழைத்துச் சென்ற ஜோதிமணி, சிந்தாமணி சாலையில் வைத்து அவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்து சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜோதிமணி, சோழவந்தான் காவல்நிலையத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இந்நிலையில் சோழவந்தான் காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்ட ஜோதிமணி நான்கு வழிச்சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளாா். அப்போது வடிவேல்கரை சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் ஜோதிமணியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளனா். அப்போது அங்கு வாகனங்கள் வந்ததால் இருவரும் தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த ஜோதிமணி மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இது தொடா்பாக நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சோழவந்தானைச் சோ்ந்த கிளிண்டன், செல்வராஜ் ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com