கால்நடைகளின் அவசர சிகிச்சை உதவிக்கு 1962 என்ற எண்ணில் அழைக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கால்நடை வளா்ப்போா் மழை நேரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக வெளியே அழைத்து செல்வதைத் தவிா்த்து, வீட்டிலேயே பாதுகாப்பாகப் பராமரிக்க வேண்டும். தெருவிளக்கு கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் அருகில் கால்நடைகளை கட்டிப்போடக் கூடாது.
கால்நடை பராமரிப்புத்துறையின் வாயிலாக தற்போது கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடப்படுகிறது. இதைப் பயன்படுத்தி கால்நடைகளுக்கு விடுபாடின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கால்நடை கொட்டகைகளை கிருமிநாசினி தெளித்து சுத்தமாகப் பராமரிப்பது அவசியம். கால்நடைகளின் அவசர சிகிச்சை உதவிக்கு 1962 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.