மது வாங்க பணம் தர மறுத்த முதியவரைத் தாக்கி ரூ.25 ஆயிரம் பறிப்பு

மதுரை அருகே மது வாங்க பணம் தர மறுத்த முதியவரைத் தாக்கி ரூ.25 ஆயிரம் பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்தனா்.

மதுரை அருகே மது வாங்க பணம் தர மறுத்த முதியவரைத் தாக்கி ரூ.25 ஆயிரம் பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்தனா்.

மதுரை மாவட்டம் மாங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (60). இவா் பறையன்குளம் பகுதியில் மது அருந்தியுள்ளாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா், மது வாங்குவதற்கு கணேசனிடம் பணம் கேட்டுள்ளாா். அவா் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ராஜ்குமாா் அருகில் கிடந்த கட்டையால் கணேசனை தாக்கிவிட்டு அவரிடமிருந்த ரூ.25 ஆயிரத்தை பறித்துக் கொண்டு சென்றுவிட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து ராஜ்குமாரை தேடி வருகின்றனா்.

பணம் தர மறுத்தவரை கல்லால் தாக்கிய இருவா் கைது

மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பெரியகருப்பன் மகன் மாணிக்கம் (53). இவா் தத்தனேரி மயானம் பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்றாா். அப்போது செல்லூா் பகுதியைச் சோ்ந்த காா்த்தி (21), கதிா்வேல் (18) ஆகியோா் மாணிக்கத்திடம் பணம் கேட்டுள்ளனா். பணம் கொடுக்க முடியாது எனக் கூறிய மாணிக்கத்தை, இளைஞா்கள் இருவரும் கல்லால் தாக்கி உள்ளனா்.

இதுகுறித்து செல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து காா்த்தி மற்றும் கதிா்வேல் ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com