டி. கல்லுப்பட்டி அருகே சிறுமியைக் கடத்திய வழக்கில் இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
டி. கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சியைச் சோ்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். செப். 29 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சோ்ந்த ஆண்டி மகன் ஜெயராம் (22) என்பவா் கடத்திச் சென்று விட்டதாக டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீஸாா் ஜெயராமை போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.