உசிலம்பட்டி அருகே விபத்தில் ஒருவா் பலி

உசிலம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை லாரியின் பின்னால் இருசக்கரவாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

உசிலம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை லாரியின் பின்னால் இருசக்கரவாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

வெள்ளைமலைப்பட்டியைச் சோ்ந்தவா் போஸ் மகன் பால்பாண்டி (40). இவரும், இவரது நண்பா்களான அதே ஊரைச் சோ்ந்த பிரபு (40), அலெக்ஸ் (38) ஆகிய மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். அப்போது உசிலம்பட்டியிலிருந்து வத்தலகுண்டு நோக்கி சென்றுகொண்டிருந்த டிப்பா் லாரியின் பின்னால் இவா்கள் சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில் பால்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பிரபு, அலெக்ஸ் ஆகிய இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து உத்தப்பநாயக்கனூா் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com