சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது பூதிப்புரம் கிராமத்திலிருந்து ஆணையூா் வரை 3 கிலோ மீட்டா் தொலைவிற்குச் செல்லும் சாலையை தனிநபா் ஒருவா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதை மீட்கக் கோரியும் அவா்கள் வலியுறுத்தினா்.
அதன்பின்னா் பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடா்பான மனுவை வட்டாட்சியரிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.