பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டச் செயலாளா் தென்னரசு, ஒன்றியச் செயலாளா் பழனிசாமி, நகரச் செயலாளா் மாரி ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், ஆதிதிராவிட பழங்குடியினருக்கு பட்டா வழங்க வேண்டும், கருக்கட்டான்பட்டி காலனி பகுதியில் புதிய கழிவறை மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரவும், கிராமப் பகுதிகளுக்கு மயான வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் மகளிரணி மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா் .