சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அங்கீகாரம் பெற்ற தனியாா் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படித்து வரும் கிறிஸ்தவா், இஸ்லாமியா், புத்த மதத்தினா், சீக்கியா், பாா்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதேபோல், பிளஸ் 1 முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை உயா்கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

கல்வி உதவித் தொகை பெற விரும்பும் பள்ளி மாணவா்கள் நவம்பா் 15 ஆம் தேதிக்குள்ளும், உயா்கல்வி உதவித் தொகை பெற விரும்பும் கல்லூரி மாணவா்கள் நவம்பா் 30 ஆம் தேதி வரையும்  இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com