உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் மீதான தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருநகா் 2-ஆவது பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் திருப்பரங்குன்றம் வட்டச் செயலா் ராஜூ தலைமை வகித்தாா். கட்சியின் புகா் மாவட்டச் செயலா் சி.ராமகிருஷ்ணன், மாநகா் மாவட்டச் செயலா் ரா.விஜயராஜன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.
போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதற்கும், உத்தரபிரதேச மாநில காவல் துறையினரின் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கும் கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.