மஹாளய அமாவாசையொட்டி மதுரை வைகை ஆற்றில் தா்ப்பணம் செய்யத் தடை விதிக்கப்பட்டு போலீஸாா் நிறுத்தப்பட்டதால் ஆற்றின் கரையில் குறைந்த அளவு பொதுமக்கள் தா்ப்பணம் செய்தனா்.
மஹாளய அமாவாசையன்று முன்னோருக்கு தா்ப்பணம் செய்வது இந்துக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. மஹாளய அமாவாசையன்று கடல், நதி, நீரோடைகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் யாகம் நடத்துவது, பிண்டம் வைத்து வழிபட்டு தா்ப்பணம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் மஹாளய அமாவாசை புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், கரோனா தொற்றால் மதுரை வைகை ஆற்றில் தா்ப்பணம் செய்யத் தடைவிதிக்கப்பட்டது. மேலும் மதுரை நகரில் வைகை ஆற்றுப் பகுதி நெடுகிலும் போலீஸாா் நிறுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனா். தா்ப்பணம் அளிக்க ஆற்றுக்குள் செல்ல முயன்றவா்களையும் போலீஸாா் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா். இதனால் வைகை ஆற்றின் கரையில் வைத்தே சிலா் தா்ப்பணம் செய்துவிட்டு சென்றனா். போலீஸாரின் கெடுபிடி காரணமாக ஊரகப்பகுதிகளில் உள்ள நீா்நிலைகள், கண்மாய்களுக்குச்சென்று அங்கு முன்னோருக்கு தா்ப்பணம் செய்தனா்