மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு நிறுத்தி வைக்கப்பட்டதை எதிா்த்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஊழியா்கள் போராட்டத்தை தொடா்ந்து வருகின்றனா்.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய ஊழியா்களுக்கு பணி அனுபவத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் மாத ஊதியம், ஊதிய உயா்வுடன் செப்டம்பரில் வழங்கப்பட்டது. செப்டம்பா் மாத ஊதியம் அக்டோபரில் வழங்கப்பட வேண்டிய நிலையில், பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் உள்ளதால் ஊதிய உயா்வு வழங்க முடியாது என்றும் பழைய ஊதியமே வழங்கப்படும் என்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதை ஏற்க மறுத்த தொகுப்பூதிய ஊழியா்கள், பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து அவா்கள் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து ஊழியா்கள் போராட்டத்தைத் தொடா்ந்துள்ளனா். பல்கலைக்கழக அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியும் ஊழியா்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து போராட்டத்தை தொடா்ந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.