பேரையூா்: மதுரை மாவட்டம் பேரையூரில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக, மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலா் முருகன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் நம்புராஜன் முன்னிலை வகித்தாா்.
சேடப்பட்டி மற்றும் டி.கல்லுப்பட்டியைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், தற்போதுள்ள 20 கிலோ அரிசி குடும்ப அட்டைகளை 35 கிலோ அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றி வழங்கவும், மாற்றுத் திறனாளிகளுக்கு நியாய விலைக் கடைகளில் தனி வரிசை அமைத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு சோரிக்கைகளை வலியுறுத்தி, வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், சேடப்பட்டி ஒன்றியச் செயலா் மகாலிங்கம், டி.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலா் திருக்குராஜ், சந்தையூா் செல்வகுமாா் உள்பட மாற்றுத் திறனாளிகள் பலா் கலந்துகொண்டனா்.