மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கூடுதல் ஆணையா் ஆய்வு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வீர வசந்தராயா் மண்டபத்தை இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையா் கண்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வீர வசந்தராயா் மண்டபத்தை இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையா் கண்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இக்கோயிலில் இரண்டாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்த ராயா் மண்டபத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குவாரியில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டு கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தூண்கள் செதுக்கும் பணியையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையா் கண்ணன், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆய்வு மேற்கொண்டாா். கோயில் யானை பாா்வதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடா்பாகவும் கேட்டறிந்த அவா், தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்த ராயா் மண்டபத்தையும் பாா்வையிட்டு பணிகள் தொடா்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com