மதுரை: வாடிப்பட்டி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை 57 ஆயிரத்து 712 தேங்காய்கள் ஏலம் எடுக்கப்பட்டன.
மதுரை விற்பனைக் குழுச் செயலா் மொ்ஸி ஜெயராணி தலைமையில் ஏலம் நடைபெற்றது. இதில் 28 விவசாயிகள் 57,712 தேங்காய்களை ஏலத்துக்குக் கொண்டு வந்தனா். 16 வியாபாரிகள் பங்கேற்றனா். அதிகபட்சமாக ரூ.13.65-க்கும் குறைந்தபட்சமாக ரூ. 7.16- க்கும் ஏலம் போனது. இதன் மூலம் ரூ. 5.20 லட்சத்திற்கு தேங்காய் வா்த்தகம் நடைபெற்றது. மேலும் 5 விவசாயிகளின் 483.5 கிலோ கொப்பரைகள், கிலோ ரூ.86-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.