இங்கிலாந்து பல்கலை.க்கு வேலம்மாள் பள்ளி மாணவி தோ்வு

மதுரை வேலம்மாள் பள்ளி மாணவி, இங்கிலாந்து மான்செஸ்டா் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு பட்டப்படிப்புக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மதுரை: மதுரை வேலம்மாள் பள்ளி மாணவி, இங்கிலாந்து மான்செஸ்டா் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு பட்டப்படிப்புக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மதுரை வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள வேலம்மாள் போதி வளாகம் பள்ளியில் பயின்றவா் ரேஷ்மா பிரபாகா். இவா் இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டா் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பொறியியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பட்டப்படிப்புக்காகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். உலகம் முழுவதும் இருந்து வழங்கப்பட்ட 90 ஆயிரம் விண்ணப்பங்களில், மாணவி ரேஷ்மா சிறந்த செயல்பாட்டுக்காக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து வேலம்மாள் கல்வி குழுமத் தலைவா் எம்.முத்துராமலிங்கம் மாணவி, ரேஷ்மா பிரபாகரை பாராட்டினாா். மாணவி ரேஷ்மா பிரபாகா் 2019-20இல் பள்ளி மாணவா் தலைவராகவும், சா்வதேச கராத்தே வீராங்கனையாகவும் திகழ்ந்தவா் என்று பள்ளி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com