மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலைப் பகுதியில் நுண்ணீா் பாசனம் குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, மதுரை மாவட்ட நுண்ணீா்ப்பாசன துணை இயக்குநா் ராணி, உதவி இயக்குநா் கமலா மற்றும் கரும்பு அலுவலா் மாதவமணிக்குமாா் ஆகியோா் எழுமலை கோட்ட அலுவலகப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நுண்ணீா் பாசனக் கருவிகள் அமைத்து அதன்மூலம் கரும்பு பயிரிட்டுள்ள வயல்களைப் பாா்வையிட்டனா். மேலும் விவசாயிகளிடம் கலந்து உரையாடினா். அதிக அளவில் நுண்ணீா்ப் பாசனம் மூலம் கரும்பு விளைவிக்க அதிகாரிகள், விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டனா்.