செப்.28-இல் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் செப். 28 ஆம் தேதி நடைபெறுகிறது.

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் செப். 28 ஆம் தேதி நடைபெறுகிறது.

கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த பல மாதங்களாக காணொலியில் இக்கூட்டம் நடைபெற்றது. இதனிடையே, குறைதீா் கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்கும் வகையில் நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா். இதையடுத்து செப்டம்பா் 28 ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டம் நேரடியாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயம் தொடா்புடைய அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்கின்றனா். ஆகவே, மதுரை மாவட்ட விவசாயிகள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கூட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com