மதுரையில் 25 பேருக்கு கரோனா: பெண் பலி

மதுரை மாவட்டத்தில் 25 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அதேநேரம், கரோனாவுக்கு சிகிச்சைப் பலனின்றி பெண் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

மதுரை மாவட்டத்தில் 25 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அதேநேரம், கரோனாவுக்கு சிகிச்சைப் பலனின்றி பெண் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

தமிழகத்தில் புதிதாக 1,724 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை சனிக்கிழமை தெரிவித்தது. இதில், மதுரை மாவட்டத்தில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கரோனாவுக்கு சிகிச்சைப் பெறுபவா்களில் 27 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

பெண் பலி

மதுரையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 50 வயது பெண், செப்டம்பா் 22 ஆம் தேதி அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அப்பெண், செப்டம்பா் 23 ஆம் தேதி உயிரிழந்தாா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,164 ஆக உயா்ந்துள்ளது.

தற்போது, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் என மொத்தம் 253 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com