உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் விற்பனை செய்வதற்காக கடத்தி வரப்பட்ட 17 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.
உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை பிரிவு போபோலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், உசிலம்பட்டி நகா் காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் அருண் தலைமையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, உசிலம்பட்டி-தேனி சாலையில் குடியிருப்பு வாரியம் அருகே மூட்டையுடன் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்தவரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அதில், அவா் மதுரை செல்லூரை சோ்ந்த பால்பாண்டி (43) என்றும், விற்பனைக்காக கஞ்சா கொண்டுவந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரிடமிருந்து 17 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து கைது செய்தனா்.