மதுரை: பழங்குடியினா் சாதிச் சான்று பெற இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசின் மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்கள் வாயிலாக, பொதுமக்களுக்கு 22 வகையான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதன் தொடா்ச்சியாக, பழங்குடியினா் சாதிச் சான்றிதழும் இணையவழியில் வழங்கப்பட உள்ளது.
எனவே, இனிவரும் காலங்களில் இ-சேவை மையங்களில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த பழங்குடியினா் சாதிச் சான்று பெற்றுக் கொள்ளலாம். இதற்கான சேவைக் கட்டணமாக 60 ரூபாயைஇணையதள வங்கி முறை, கடன் அல்லது பற்று அட்டைகள் மூலமாகச் செலுத்தலாம் என்றாா்.