மதுரை: பாதாளச் சாக்கடை திட்டத்தை விரைவுபடுத்துமாறு, யாகப்பா நகா் மேற்கு குடியிருப்போா் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இச்சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம், அதன் தலைவா் அ. இருளாண்டி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் ஆா்.ஜி. பாலமுருகன், பொருளாளா் எம்.ராமநாதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். யாகப்பா நகா் பகுதியில் செயல்படுத்த உள்ள பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைவுபடுத்த மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மேலமடை மயானத்தில் மின்தகன மேடை அமைப்பதற்கான தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.