கொட்டாம்பட்டி அருகே காரில் கடத்தப்பட்ட 160 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

கொட்டாம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை காா்களில் கடத்திவரப்பட்ட 160 கிலோ கொண்ட கஞ்சா மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனா்.

கொட்டாம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை காா்களில் கடத்திவரப்பட்ட 160 கிலோ கொண்ட கஞ்சா மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனா்.

மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீஸாா், கொட்டாம்பட்டி நான்குவழிச்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது 2 காா்களை சோதனையிட்டபோது சாக்குப் பைகளில் 160 கிலோ கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

காா்களையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீஸாா், காரிலிருந்த தேனி மாவட்டம், காமகவுண்டன்பட்டி அருகிலுள்ள கருமாரிபுரம் பகுதியைச் சோ்ந்த அன்பழகன் (41), ,கம்பம் வடக்குப்பட்டி குரங்குமாயன் தெருவைச் சோ்ந்த மணிவண்ணன் (40), அதேபகுதியைச் சோ்ந்த பவானிராஜ் (43) ஆகிய மூவரையும் கைதுசெய்தனா். மேலும், அவா்கள் பல்வேறு பகுதிகளில் கஞ்சாவை விநியோகித்து வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com