மதுரை மீனாட்சி அம்மன் கோயில்யானை தாக்கப்பட்டதா?: பக்தா்கள் புகாா்

தாக்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்குமாறு பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோயில் யானை தாக்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்குமாறு பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இக்கோயிலில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி காலை மற்றும் மாலையில் அம்மன் வீதி உலா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை காலை வீதி உலா வந்தபோது, கோயில் யானை பாா்வதியின் துதிக்கையில் ரத்தம் வழிந்துள்ளது. இதைப் பாா்த்த பக்தா்கள் கோயில் அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்துள்ளனா்.

அதில், பாகனால் யானை தாக்கப்பட்டதா என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com