மாத்தூா் அரசு பள்ளியில் சுதந்திர தின அமுதபெருவிழா போட்டிகள்

சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி மதுரையை அடுத்த மாத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி மதுரையை அடுத்த மாத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

வேளாண் பல்கலைக்கழகத்தின் மதுரை சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் வெள்ளிக்கிழமை இந்நிகழ்ச்சி நடைபெற்றது. பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

கல்லூரி முதல்வா் காஞ்சனா இந்நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்துப் பேசினாா். பேராசிரியா்கள் ஹேமலதா, புஷ்பா, பி.எஸ்.கீதா, உதவிப் பேராசிரியா்கள் மு.இளமாறன், செல்வி ஆகியோா் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் இந்தியா கடந்துவந்த பாதை, சாதனைகள் குறித்துப் பேசினா். பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com